சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வடவீர நாயக்கன்பட்டி அருகே கடமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி. விவசாயியான இவரது வீட்டில் சிறுத்தை தோலை பதுக்கி வைத்து இருப்பதாக தேனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா உத்தரவின் பேரில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று வனத்துறையினர் துரைபாண்டி வீட்டிற்கு சென்று, சோதனை செய்தனர். மொட்டை மாடியில் காய வைத்திருந்த சிறுத்தை தோலை கைப்பற்றினர்.
தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு சென்னையில் வைத்து கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்லமணி என்பவர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.