சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வடவீர நாயக்கன்பட்டி அருகே கடமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி. விவசாயியான இவரது வீட்டில் சிறுத்தை தோலை பதுக்கி வைத்து இருப்பதாக தேனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா உத்தரவின் பேரில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று வனத்துறையினர் துரைபாண்டி வீட்டிற்கு சென்று, சோதனை செய்தனர். மொட்டை மாடியில் காய வைத்திருந்த சிறுத்தை தோலை கைப்பற்றினர்.
தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு சென்னையில் வைத்து கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்லமணி என்பவர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.