கோவை மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் , காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பில்லூர் வனச்சாலையின் வழியே மஞ்சூர் செல்லும் வழியில் வாகனங்களை மறித்து கடந்த சில மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று உலா வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு இன்று அரசு பேருந்து ஒன்று சென்றது.
அந்த பேருந்து நீராடி என்ற மலை கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பேருந்தை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது. மேலும் பேருந்தினை நோக்கி யானை முன்னேறி வந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனே பேருந்தினை நிறுத்தி பின் நோக்கி இயக்கினார்.
இருப்பினும் யானை அங்கிருந்து நகராமல் சாலையின் நடுவே நின்று கொண்டு அங்கும் இங்குமாக யானை அங்கேயே உலாவி கொண்டு இருந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் இருந்த போதிலும் பேருந்தே அமைதியாக காணபட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து ஒரு வழியாக காட்டுயானை அங்கிருந்து அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் அரசு பேருந்து அங்கிருந்து புறபட்டது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.