தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இருப்பினும் 2026ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்ய இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் போது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எக்ஸ் தளத்தின் வாயிலாகவும், அறிக்கையின் வாயிலாகவும் தனது கருத்துக்களையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார் விஜய்.
மேலும் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு தொகுதி வாரியாக ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
மேலும் பல நலத்திட்ட உதவிகளும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் கடைசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ள விஜய் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, மாநாட்டுப் பணிகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறப் போகும் இந்த மாநாட்டில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் பழைய கொடியில் விஜய் படத்துடன் உன்னால் முடியும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. தற்போது அரசியல்கட்சி என்பதால் இரண்டு நிறங்களுடன் கொடியும் வண்ணங்களின் நடுவே வாகை மலர் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பழந்தமிழ் நூல்களில் வாகை மலர் முக்கிய இடம் பெறுகிறது. போருக்குச் சென்றவர்கள் போரில் வெற்றி பெற்று வாகை மலர் சூடி வருவதை வாகைத் திணை தொல்காப்பியத்தில் உணர்த்துகிறது.
மேலும் விஜய் என்றாலே வெற்றி என்று அர்த்தம் எனவே விஜய் படமும், வாகை மலரும் கொடியில் இடம்பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
This website uses cookies.