விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் செல்வது தொடர்பாக இருசமூக மக்களிடையே மோதல் நிலவி வந்தது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி வருவாய் துறையினர் கடந்த ஜூன் மாதம்,7ஆம் தேதி கோவிலுக்கு சீல் வைத்தனர்.
கோயில் நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என இருசமூக மக்களும் பரஸ்பரம் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பல காட்ட விசாரணையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதனால் விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு தரப்ப்பிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற நிலையில் இன்று 3 ஆம் கட்ட விசாரணைக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 9 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டு 9 பேர் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தை முடிவில், மேல்பாதி கிராமம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்ததால் இன்று நாங்கள் 9 நபர்களும் நேரில் ஆஜரானதாகவும், திரௌபதி அம்மன் கோயில் உள்ளே சென்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த கதிரவன், கந்தன், கற்பகம், கனிமொழி ஆகியோருக்கு இன்றோ அல்லது நாளையோ தீர்வு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துரோபதி அம்மன் கோவிலில் பட்டியல் இன மக்கள் வழிபாடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.