தருமபுரி ; காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கும்பாரஹள்ளி ஊராட்சியில் அமைச்சர் வருகைக்காக இரண்டு மணி நேரம் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கும்பாரஹள்ளி ஊராட்சியில் வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவருந்தும் கூட கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அமைச்சர் வருகைக்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்று கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க வெயிலில் நின்றிருந்த பெண்கள் நின்றுருந்த இடத்திலேயே வெயிலில் அமர்ந்தனர்.
அதன்பின் அமைச்சர் வருகை தந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின் பட்டாசு வெடித்ததில் கீழ் கொல்லுப்பட்டியை சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கு மண்டையில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.