பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பணப் பாளையம் கிளை தலைவராக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் டைமண்ட் என்பவர் கடைகளுக்கு டீ தூள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரும் இன்று பல்லடம் அருகே ராயர் பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கையில் பட்டா கத்திகளுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்து பட்டாகத்தியால் தாக்கியுள்ளனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதை கண்ட எட்டு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வன் மற்றும் டைமண்ட் ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் தமிழ்ச்செல்வன் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி வினோத் கண்ணன் என்பவர் அதே பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
வைரலாகும் செல்வராகவனின் இன்ஸ்டா வீடியோ நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல்…
சைந்தவிக்கு எப்போதும் நல்ல மனசுங்க இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் ஜி வி பிரகாஷ்,இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் 'கிங்ஸ்டன்'…
நடிகர் பாண்டியன் இறப்பின் கொடூர பின்னணி தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பாண்டியன்,இவர்…
சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ்…
இயக்குனராகும் டைட்டானிக் பட ஹீரோயின் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய திரைப்படம் டைட்டானிக். ஒரு கப்பலில்…
நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…
This website uses cookies.