உயிரிழந்த மகன் சேமித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் 80வயது மூதாட்டி ஆட்சியர் உதவியை நாடியுள்ளார்.
கோவையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த தான் மகன் சேமித்து வைத்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்து அதனை மாற்றித்தரக் கோரினார்.
கோவை உப்பிலிபாளையம் பஜனை கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவரது கணவர் சுந்தர்ராஜ். இவர்களது மகன் செந்தில்குமார். மாரியம்மாளின் கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து விட்டனர்.
லாரி ஓட்டுநரான செந்தில்குமார் கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.இதனிடையே சமீபத்தில் மாரியம்மாள் தனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளார்.
அப்போது அவரது மகன் செந்தில் குமார் பயன்படுத்திய பை ஒன்று கிடைத்தது. அதனைப் பார்த்தபோது அதில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பழைய செல்லாத ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இருந்தன.
இதனிடையே அந்த மூதாட்டி அந்த ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து ஆட்சியரிடம் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என்று மனு அளித்தார்.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.