புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் வயது 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது மனைவியுடன் ஆரோவில் அருகே உள்ள கலைவாணர் நகர் புது நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருவதை தொழிலாக செய்து வந்தார்.
இவரது வீட்டின் எதிரே மாமியார் கோமதி வசித்து வந்த நிலையில் கோமதிக்கும் புதுவை பகுதியைச் சேர்ந்த தேவா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
மாமியார் கோமதி வீட்டுக்கு தேவா அடிக்கடி வந்து செல்வதை முகுந்தன் தட்டிக் கேட்டுள்ளார். நேற்று இரவு மனைவி ரம்யா உடன் புதுச்சேரி தியேட்டரில் ஜெய்லர் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது தேவாவுக்கும் முகுந்தனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் முகுந்தன் வீட்டுக்கு வந்த தேவா மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை சரமாரியாக வயிறு கழுத்து பகுதியில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனைவி ரம்யா கண்முன்னே சரிந்து விழுந்த முகுந்தன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
ரம்யா கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கடந்த முகுந்தனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வந்து முகுந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான முகுந்தனுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
தனது மாமியாரிடம் தகாத உறவு வைத்திருந்ததை தட்டிக்கேட்ட முகுந்தன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தேவாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.