Categories: தமிழகம்

”எங்கே போனாலும் நானும் வருவேன் ” : மகன் இறந்த ஒரு சில மணி நேரத்தில் உயிரிழந்த தாய்.. மரணத்திலும் நெகிழ வைத்த தாய் – மகன் பாசம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே நேற்று மகன் இறந்த துக்கம் தாங்காமல் இன்று தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பண்ணியா மலையைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சிவக்குமார் (வயது 40) கூலித் தொழிலாளி. இவருக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.

சிவகுமாருக்கு சில ஆண்டுகளாக இருதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சிவகுமாரின் இறுதி சடங்குகள் செய்வதற்காக அவரது உடல் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

மகனின் இறப்பு அவரது தாய் மருந்திஅம்மாளுக்கு தெரிய வரவே தனது மகன் இழந்ததை நினைத்து அழுது கொண்டிருந்த மருந்திஅம்மாள் இன்று அதிகாலை மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார்.

அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கிய போது அவரது உயிர் பிரிந்து விட்டது தெரிய வரவே அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். தற்பொழுது மகன் மற்றும் தாயின் ஆகிய இருவரின் உடல்களும் இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மகன் இறந்த செய்தி கேட்ட தன்னுயிரையும் விட்ட தாயின் அன்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மகளிர் தினத்தில் தனது மகன் இறந்த செய்தி கேட்டு தன்னுயிரை விட்ட அம்மாவின் பாசம் அப்பகுதியில் பெரும் வியப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

53 minutes ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

58 minutes ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

3 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

3 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.