தூத்துக்குடி 3வது மையில் எப்சி குடோன் அருகில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடியின் லாரி செட் உள்ளது.
இங்கு கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஞானராஜ் (வயது 55) என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார், நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட லாரியும் நிறுத்தப்பட்டிருந்தன.
இன்று அதிகாலை எழுந்த லாரி ஓட்டுனர்கள் லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு தென்பாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எதற்காக காவலாளி ஞானராஜ் கொலை செய்யப்பட்டார் ? எப்போது கொலை செய்யப்பட்டார், கொலையை செய்த குற்றவாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் நண்பர் ஜெயக்குமார் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் அவரது ஆசிரியை மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் நண்பர் ஜெயக்குமாருக்கு ஜெயக்கொடி தனது லாரி செட்டில் வேலை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் குடிபோதையில் சுற்றித்திரிந்ததால் ஜெயக்குமாரை வேலைக்கு வேண்டாம் என கூறி ஜெயக்கொடி வேலையில் இருந்து நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஜெயக்கொடி லாரி செட் அலுவலகத்துக்கு வந்து தனது துணிகள் உள்ளே இருப்பதாகவும் கேட்டை திறந்து விடும்படியும் காவலாளி ஞானராஜிடம் கேட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் ஜெயக்குமாரின் செருப்புகள் உள்ளதால் கொலை சம்பவத்தை அவர் செய்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிரமாக அவரைத் தேடி வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.