நீலகிரி மலை ரயில் பயணியரை மகிழ்வித்து ‘பாடும் நிலாவாக’ வலம் வந்த டி.டி.ஆர். வள்ளி பணி ஓய்வு பெற்றுள்ளார்.
நீலகிரி மலை ரயிலில் சுற்றுலா பயணியரை பாடல்களால் மகிழ்ச்சியடைய செய்தவர் டிக்கெட் பரிசோதகர் வள்ளி. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பட பாடல்களை பாடி, சுற்றுலா பயணிகளை கவர்ந்த வள்ளி, மார்ச் 30ல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் நேற்று குன்னுார் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கேரள மாநிலம், ஷொர்னுாரில் 1985ல் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 2012ல் டிக்கெட் பரிசோதகருக்கான தேர்வு எழுதி, கோவை தகவல் மையத்திற்கு மாற்றப்பட்டேன்.
2016 முதல் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினேன். ரயிலில் சுற்றுலா பயணியர் சோர்வடையாமல் இருக்க, தினமும் சினிமா பாடல்களை பாடி மகிழ்விப்பேன்.
இதனால், சேலம் கோட்ட பொது மேலாளரிடம் விருது பெற்றேன். ரயில்வே அமைச்சகம் எனக்கு, ‘நைட்டிங்கேல்’ விருது வழங்கியது. எனது 37 ஆண்டு
பணியில் நீலகிரி மலை ரயிலில் பணி புரிந்த காலம், வாழ்வின் பொற்காலமாக இருந்தது என அவர் கூறினார்.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.