Categories: தமிழகம்

அடுத்தவர் நிலத்தை காட்டி ரூ.61 லட்சம் அபேஸ் : ரியல் எஸ்டேட் பிசினஸ் என கூறி ஆசை காட்டி மோசடி செய்த ஆசாமிகள் கைது!!

அடுத்தவர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை கே.கே.புதுார் மணியம் காளியப்பா வீதி ஐஸ்வர்யா பேராமவுன்ட் அபார்ட்மென்டில் வசிப்பவர் வெங்கடேசன் 55. இவர் விமான நிலையம் அருகே ஸ்ரீனா பிராப்பர்டீஸ் என்ற பெயரில் 2015 முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நிலம் வாங்கி வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக அறிமுகமானவர் விளாங்குறிச்சி பேங்கர்ஸ் காலனி மதி நகரை சேர்ந்த 59″வயதான குணசேகரன்.

இவர் பீளமேட்டை சேர்ந்த வேலுமணி, இருகூரை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். சுரேஷ்க்கு சொந்தமான சொத்து பாப்பம்பட்டியில் உள்ளது என்றும் மொத்தமுள்ள 35 ஏக்கரில் நான்கில் ஒரு பங்கு சுரேஷ்க்கு சொந்தமானது என்றும் மூவரும் கூறி நேரில் அழைத்துச் சென்று இடத்தையும் காண்பித்தனர் உள்ளனர்.

இதை வெங்கடேசன் நம்பி உள்ளார். அந்த இடத்தில், கூட்டு நிறுவனம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்றும் வீடு கட்டி விற்று வரும் லாபத்தில் பங்கு பிரிக்கலாம் என்றும் மூவரும் ஆசை காட்டினர்.

அதை நம்பிய வெங்கடேசன் 2021″ம் ஆண்டில் சுரேஷ்க்கு 64 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் விசாரணையில் அந்த இடம், சுரேஷ்க்கு சொந்தமானதில்லை என்று தெரியவந்தது. இது பற்றி கேட்டதும் கொடுத்த பணத்தில் 3 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர்.

மீதமுள்ள 61 லட்சம் ரூபாய்க்கு கொடுத்த காசோலை, பணமின்றி திரும்பி வந்து விட்டது என்று வெங்கடேசன், மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் மோசடி குற்றம் சாட்டப்பட்ட குணசேகரன், சுரேஷ், வேலுமணி ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.