Categories: தமிழகம்

வேங்கைவயல் சம்பவம் போல அடுத்த அதிர்ச்சி.. மேல்நிலை தொட்டியில் கலந்தது என்ன? அதிகாரிகள் ஆய்வு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தில் 500 மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர் கேட்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொட்டி அருகே திருப்பதி என்பவர் தனியாக ஒரு அறையில் மாந்திரீக செய்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை மிரட்டுவதாகவும் தெரிய வருகிறது.

அவர் இருக்கும் அறைக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்குமாறு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இன்று காலை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் திருப்பதி என்பவர் அடிக்கடி ஏறி இறங்கியதால் தண்ணீரில் ஏதாவது கலந்திருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்து கம்பைநல்லூர் காவல்துறையினருக்கு புகார் தெரித்தனர்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்த பின்னர் தொட்டியில் இருந்த அனைத்து தண்ணீரையும் வெளியேற்றினார்கள்.

அதன்பின் ஆய்வுக்காக தொட்டியில் இருந்த தண்ணியை கேன் மூலமாக எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து இந்த தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட கடம்பரஹள்ளி, வகுரப்பம்பட்டி, பெரியவுண்டம்பட்டி, பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்த, கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு தலை வலி, வயிறு வலி, மயக்கம் வருவது போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு மாணவர்களை அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்திலே செவிலியர்களை வரவழைத்து 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

6 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

7 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.