Categories: தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

விஸ்வரூபம் எடுக்கும் கொடைக்கானல் விவகாரம்… கட்டிடத்துக்குள் மறைத்து வைத்த பொருள்.. சிக்கிய பாபி சிம்ஹா!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் பிரபல நடிகரான பாபிசிம்ஹா தனது நிலத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த ஜமீர் என்பவர் கட்டிடம் க‌ட்டும் பணிகளை மேற்கொண்டார்,

மேலும் 90 சதவிகித பணிகள் முடிந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் பாபிசிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் க‌ட்டிட‌ க‌ட்டுமான‌ ச‌ம்ம‌ந்த‌மாக‌ முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது/

மேலும் பாபிசிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபிசிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது பாபிசிம்ஹா முதியவர் என்று பாராமல் ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன்,பாபிசிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக‌ இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக
இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்ததால் இது குறித்து ஜமீர் உஷேனிடம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் உஷேன் பாபிசிம்ஹாவிட‌ம் அறிவுரை கூற முற்பட்ட போது இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது, இதனையடுத்து உஷேனுக்கு சொந்த‌மான தங்கும் விடுதி செண்பகனூர் பகுதியில் உள்ளது.

இந்த விடுதிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் சென்றதாகவும் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும்,அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதியில் இருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்திலும் ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி க்கும் புகார் அளித்துள்ளனர், இதன் அடிப்படையில் கடந்த 10ஆம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில் பாபிசிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜி அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தகாரரின் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபிசிம்ஹா திருடி க‌ட்டிட‌த்திற்குள் வைத்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி பாபிசிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை,ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3வது நபர் உஷேன் தற்போது பாபிசிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் ராமசந்திரா ராஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்புகளில் இருந்தும் மாறி மாறி கொடுக்கப்படும் புகார்களால் தொடர்ந்து இரண்டு தரப்புகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது தற்போது காவல் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

4 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

5 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

5 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

6 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

6 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

6 hours ago

This website uses cookies.