பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவு எழுத்தரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடிவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பதிவு எழுத்தர் சுரேஷ் குமார் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வட பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர் தாட்கோவில் தனது மனைவிக்கு மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெறுவதற்காக பதிவு எழுத்தர் சுரேஷ்குமாரை அணுகி உள்ளார்.
அப்போது சுரேஷ்குமார் குணசீலனிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து குணசீலன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரை அணுகி புகார் தெரிவிக்கவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரூபாயை குணசீலனிடம் கொடுத்து சுரேஷ்குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பினர்.
இதனை அடுத்து சுரேஷ்குமார் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.