Categories: தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் செய்த துணிகரம்.. கோவையில் பகீர்!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் செய்த துணிகரம்.. கோவையில் பகீர்!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5 சவரன் நகைகளை பறித்த மூன்று பேர் 4மணி நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள கனேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சின்னம்மாள் இவரது மருமகள் (வேலுமயில்) தேனி மாவட்டத்தில் நீதிபதியாக இருந்து வருவதால் கணவருடன் தேனியில் உள்ளார்.

இதனால் சின்னம்மாள் மட்டும் கனேசபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதேசமயத்தில் தனியாக இருந்தாலும் இட்லிக்கு மாவு ஆட்டி அதனை விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்து கார் லிவரை கொண்டு மூதாட்டியை தலையில் தாக்கி விட்டு மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு மூவரும் தப்பி ஓடினர்.

பின்னர் இது குறித்து மூதாட்டி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார் அது குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில் குற்றவாளிகளை கண்டறிந்து குற்றம் நடந்து நான்கு மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் சிறுமுகை பாரதி நகர் பகுதியை சேர்ந்த சர்மா என்பவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி மாவு வாங்க சர்மா என்பவர் மூதாட்டி கடைக்கு சென்று வந்த நிலையில் கழுத்தில் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்துள்ளான்.

இதற்காக மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்த முகமது அம்ரித் மற்றும் 17வயது சிறுவன் ஒருவன் என இரண்டு பேரை சேர்த்து கொண்டு மூதாட்டியின் வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டு நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றசம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் திறன்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

6 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

6 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

7 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

7 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

8 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

9 hours ago

This website uses cookies.