Categories: தமிழகம்

அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற முதியவர் : கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார்.. திக்திக் காட்சி!! (வீடியோ)

திண்டுக்கல் : நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதி முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் என்னுமிடத்தில் காசிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் 100 நாள் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நான்கு வழிச்சாலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விவேக் என்பவரும் அவரது மனைவியும் வந்துள்ளனர். காரை விவேக் ஓட்டி வந்துள்ளார்

வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரம் என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென திண்டுக்கல் – கரூர் தேசிய நான்கு வழிச்சாலையை பெரியசாமி கடக்க மறுபுறத்தில் இருந்து ஓடி வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் அவர் மீது லேசாக மோதியது சாலையை கடக்க பெரியசாமி ஓடி வருவதை பார்த்த காரின் ஓட்டுனர் விவேக் துரிதமாக செயல்பட்டு அவர் மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பினார். அப்போதும் காரின் முன் பக்க பகுதியில் பெரியசாமி மீது மோதியது. இதில் பெரியசாமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

மேலும் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகன போக்குவரத்து ரோந்து காவலர்கள் உடனடியாக பெரியசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துரிதமாக செயல்பட்டு காரை இயக்கிய ஓட்டுனர் விவேகால் பெரியசாமி சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தற்போது இது குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

18 minutes ago

மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…

32 minutes ago

AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…

35 minutes ago

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

1 hour ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

2 hours ago

This website uses cookies.