திண்டுக்கல் : நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதி முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் என்னுமிடத்தில் காசிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் 100 நாள் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நான்கு வழிச்சாலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விவேக் என்பவரும் அவரது மனைவியும் வந்துள்ளனர். காரை விவேக் ஓட்டி வந்துள்ளார்
வேடசந்தூர் அருகே ரங்கநாதபுரம் என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென திண்டுக்கல் – கரூர் தேசிய நான்கு வழிச்சாலையை பெரியசாமி கடக்க மறுபுறத்தில் இருந்து ஓடி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கார் அவர் மீது லேசாக மோதியது சாலையை கடக்க பெரியசாமி ஓடி வருவதை பார்த்த காரின் ஓட்டுனர் விவேக் துரிதமாக செயல்பட்டு அவர் மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பினார். அப்போதும் காரின் முன் பக்க பகுதியில் பெரியசாமி மீது மோதியது. இதில் பெரியசாமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
மேலும் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகன போக்குவரத்து ரோந்து காவலர்கள் உடனடியாக பெரியசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துரிதமாக செயல்பட்டு காரை இயக்கிய ஓட்டுனர் விவேகால் பெரியசாமி சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது இது குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.