Categories: தமிழகம்

பைக் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவர் தூக்கி வீசப்பட்ட காட்சி : பதை பதைக்க வைக்கும் வீடியோ!!

திருப்பூர் : பல்லடம் அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 65 வயது முதியவர் பலியான சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுடள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 65). இவர் காளிவேலம்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் கம்பெனியில் வாட்ச்மேனாக பணி புரிந்து வருகிறார்.

இன்று காலை பணி முடிந்து நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த அவர் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மருதமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஹாரீஸ் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

41 minutes ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

1 hour ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

2 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

2 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

4 hours ago

This website uses cookies.