மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. நகைகளை திருடி லாட்ஜில் உல்லாசமாக இருந்த குற்றவாளிக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (65). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முத்துலட்சுமி வீட்டின் மாடிப்படி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் 54 என்பவர் முத்துலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து சண்முகசுந்தரத்தை கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் மூதாட்டி முத்துலட்சுமி வீட்டுக்குள் நுழைந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இதை யாரிடமாவது சொல்லி விடுவார் என நினைத்து கொலை செய்துள்ளார் . பின்னரும் பாலியல் பலாத்காரம் செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் நகையை விற்ற பணத்தை வைத்து கொண்டு உல்லாசமாக பல்வேறு இடங்களுக்கு சென்று லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளார். தன்னை காவல்துறை தேடுவதை கூட தெரிந்தும் உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.
தனது உறவினர் திருமணத்துக்கு சென்ற போது அங்கிருந்த உறவினர்கள் சண்முகசுந்தரம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இந்த அடிப்படையில் காவல்துறையினர் மார்த்தாண்டத்தில் இருந்த ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்த போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரத்தை காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் முகத்தை காட்டாமல் குற்றவாளி மறைக்கும் விதமாக முகத்தில் போர்வையை மூடிக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது காவல்துறையை குற்றவாளிக்கு பாதுகாப்பாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரம் பின்னர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கையில் இருந்து வந்த நபர் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.