Categories: தமிழகம்

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் காலில் விழுந்து கதறியழுத மூதாட்டி : வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்ற சோகம்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் வழக்கு தொடுத்தார்.

இதனையடுத்து கடந்த 6 மாதத்திற்க்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தனர்

ஆனால் 6 மாதம் கடந்தும் குடியிருப்புகளை காலி செய்யாமல் இருந்ததால், இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் அகற்ற முடிவு செய்து அவற்றை அகற்றி வந்தனர்.

அப்போது குடியிருப்பு வாசிகள் சிலர் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் தீ குளிப்பதாக கூறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் வழுகட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பின்பு அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்போடு அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. அப்போது ஒரு மூதாட்டி எனது மாட்டு கொட்டைகையாவது விட்டு விடுங்கள் எங்களுக்கு 5 மாடு இருக்கு அதனை எங்கு கொண்டு செல்வேன் உங்கள் காலில் கூட விழுகின்றேன் என அதிகாரிகளை கை எடுத்து கும்பிட்டு அழுதார்.

ஆனால் சற்றும் மனம் தளராத அதிகாரிகள் அவரை துரத்திவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

6 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

6 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

7 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

8 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

8 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

8 hours ago

This website uses cookies.