Categories: தமிழகம்

கத்தியைக் காட்டி காதலியை அலேக்காக தூக்கிச் சென்ற காதலன்! சினிமா பாணியில் நடந்த இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்!

சென்னை சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் இளம் வயதுடைய அஜய். அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் அப்பெண்ணில் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த வேலையில் பெண்ணின் பெற்றோர்கள் மாரிமுத்து என்பவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பெண்ணுக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தன் வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்வை நடத்தியுள்ளனர். நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போது அஜய் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கு உள்ளவர்களை மிரட்டி தன் காதலியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தடுத்தபோது அஜய், ரோஹித் குமார் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்த ரோஹித் குமார் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சம்மதத்தோடு தான் அஜய் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sangavi D

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

4 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

5 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

7 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

7 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

8 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

9 hours ago

This website uses cookies.