Categories: தமிழகம்

கத்தியைக் காட்டி காதலியை அலேக்காக தூக்கிச் சென்ற காதலன்! சினிமா பாணியில் நடந்த இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்!

சென்னை சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் இளம் வயதுடைய அஜய். அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் அப்பெண்ணில் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த வேலையில் பெண்ணின் பெற்றோர்கள் மாரிமுத்து என்பவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பெண்ணுக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தன் வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்வை நடத்தியுள்ளனர். நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்த போது அஜய் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அங்கு உள்ளவர்களை மிரட்டி தன் காதலியை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தடுத்தபோது அஜய், ரோஹித் குமார் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து காயமடைந்த ரோஹித் குமார் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சம்மதத்தோடு தான் அஜய் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sangavi D

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

7 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

8 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

10 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

11 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

11 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

12 hours ago

This website uses cookies.