Categories: தமிழகம்

கட்சிக்கும் உண்மையில்லை.. மக்களுக்கும் உண்மையாக நடந்து கொள்ளாமல் உள்ளார் அமைச்சர் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் நீண்ட கலவரங்களுக்கு பின்பாக கடந்த கால நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற முனைப்போடு திமுகவின் அமைச்சர் மனோ தங்கராஜ் செயல்பட தொடங்கி இருக்கிறார்.

காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினைகள் பிரச்சனையில் இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது.இது மிகவும் துரதிஷ்டவசமானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வந்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருப்பார் என்று நினைக்கின்றேன். அப்படிப்பட்ட சூழ்நிலை மாவட்ட ஆட்சியாளரும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஒரு அழுத்தங்கள் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது அவர் எனக்கு சவால் விட்டு உள்ளார் .எங்கு வேண்டுமானாலும் வாருங்கள் விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.

அவரது செயல்பாடுகள் அந்த நம்பிக்கை தரவில்லை. மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர். அவர் கோரிக்கை வைக்கக் கூடாது. மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்குறைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதைவிட தலைகுனிவு வேற ஏதும் உண்டா.15% தாருங்கள் என்று கூறுகின்ற அவ்வளவு தரம் தாழ்ந்து போய் உள்ளார்கள்.

குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்வர் நேரடி பார்வையை கொண்டு செல்ல வேண்டும். என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் 11ந் தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

IPL பிளே ஆஃப் 4 டீம் ரெடி..முன்னாள் வீரர் சொன்ன ரகசியம்.!

இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…

56 minutes ago

திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

3 hours ago

கண்ணாடி உடைப்பு..ரசிகர்கள் அட்டகாசம்..டென்ஷனில் கத்திய விக்ரம்.!

திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…

4 hours ago

‘டிராகன்’ படத்தால் VJ சித்துக்கு அடிச்ச லக்..!

ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…

5 hours ago

இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!

நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…

18 hours ago

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

19 hours ago

This website uses cookies.