Categories: தமிழகம்

கோஷ்டியை வெச்சிட்டு கட்சி கட்சினு கத்தறது… சுப்ரீம் கோர்ட் போனாலும் ஓபிஎஸ் இனி ஒண்ணும் பண்ண முடியாது : ஜெயக்குமார் விமர்சனம்!!

கோஷ்டியை வெச்சிட்டு கட்சி கட்சினு கத்தறது… சுப்ரீம் கோர்ட் போனாலும் ஓபிஎஸ் இனி ஒண்ணும் பண்ண முடியாது : ஜெயக்குமார் விமர்சனம்!!

திமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சமயத்தில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சி தமிழர், கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. இதனை தமிழ்நாடு மக்களும், அதிமுக தொண்டர்களும் கொண்டாடப்படுகின்ற நாளாக மாறியுள்ளது.

ஒரு சிறப்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மனுக்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகர் ஆகியோரை அதிமுகவில் நீக்கியது செல்லும் என்ற அடிப்படையில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. குட்டு மேல் குட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி, ஓபிஎஸ் கிட்ட இருப்பது கட்சி இல்ல, அது ஒரு கோஷ்டி. மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுகவின் கரை வேட்டியை கட்ட கூடாது. அதுதான் மானமுள்ளவர்களுக்கு அழகு.

இதுபோன்று அதிமுக கொடி, ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைவர்கள் படங்களை பயன்படுத்த கூடாது. அதிமுக கொடி, கரை வேஷ்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம்.

எனவே ஓபிஎஸ் இனிமேல் சினிமாவுக்கு நடிக்க போகலாம் என கடுமையாக விமர்சித்த அவர், ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றமே சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் கட்சிகளில் அதிமுக மாநாடு போன்ற வேறு யாரும் நடத்தியதில்லை. அதிமுக தான் சரித்திரம் படைக்கு ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது. இனிமேல் இதுபோன்ற மாநாட்டை மற்ற கட்சிகள் நடத்த முடியாத வகையில் அதிமுக மாநாடு அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

8 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

9 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

10 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

10 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

11 hours ago

This website uses cookies.