முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுயர திருவுருவ படத்திற்கு வண்ண மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கலைஞரை நேரில் பார்ப்பது போல இருப்பதாய் என்று கூறி சில நிமிடங்கள் அமைதியாக அங்கேயே நின்று மரியாதை செலுத்தினர்.
மேலும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் அருமையாக அலங்கரிக்கப்பட்ட கலைஞர் இல்லம் முன்பு மரியாதை செலுத்தி செல்கின்றனர்.
இதே போன்று சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் திறந்து வைத்த காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழக வண்ணமான கருப்பு சிவப்பு வண்ண பலூன்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை பொதுமக்கள் பலர் தூவி மரியாதை செலுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.