தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்தார்.
அப்போது லால்குடி அடுத்து ஆலங்குடி மகாஜனம் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி கூடுதலாக வேண்டி நேரடியாக கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று உடனடியாக பேருந்து விடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8:35 மணி மற்றும் மாலை 6:05 மணிக்கு ஆலங்குடி மாகாணத்தில் இருந்து லால்குடிக்கும் என தினசரி நான்கு நடைகள் இப்பெயர்ந்துகள் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
இவ் வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் கட்டணமில்லா மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் முதல்வர் ஆணைக்கிணங்க நகர பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை ஆலங்குடி மகாஜனத்திலிருந்து இயக்கப்பட்டது. பேருந்திற்கு முன்பாக பூஜையிட்டு சூடம் ஏற்றி பின்னர் பேருந்து ஓட்டுனர் இயக்கினார்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்த அடுத்த நாளே பேருந்து இயக்கியதால் முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள் மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
This website uses cookies.