பரப்புரை நேரம் முடிந்தும் இரவு 11 மணி வைர காத்திருந்த மக்கள் : டிடிவி தினகரனை நெகிழ வைத்த கிராம மக்கள்!
தேனி மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
திங்கட்கிழமை மாலை இரண்டாம் கட்ட பரப்புரையை பெரியகுளத்தில் இருந்து துவக்கினார். 14 இடங்களில் தினகரன் பேசுவாத இருந்தது. ஆனால் எருமலைநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி, எ. புதுப்பட்டி ஆகிய 3 இடங்கள் மீதமிருக்கும் போதே தேர்தல் ஆணைய விதிமுறைப்படி 10 மணி அளவில் பரப்புரை நேரம் ஓய்ந்தது.
ஆனால் தேவதானப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில்
வேனில் இருந்தவாறே, சாலையின் இருபுறமும் கூடி நின்ற வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையசைத்தவாறும் கரம் கூப்பி காத்திருந்த பொதுமக்களிடம் கை அசைத்து சென்றார் டிடிவி தினகரன்.
எனவே பரப்புரை நேரம் ஓய்ந்தாலும் மணிக் கணக்கில் கால் கடுக்க காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியோர் என பொதுமக்களும் வாக்காளர்களும் தினகரனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
ஒரு கட்டத்தில், பேசி விட்டே செல்ல வேண்டும் என அவரது வாகனம் முன் கூடியும் அவர் வாகனத்தை மறித்தும் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டனர்.
ஆனாலும் தேர்தல் விதிமுறைகளை மீறக்கூடாது என்பதற்காக டிடிவி தினகரன் கிராம மக்களின் வரவேற்பை ஏற்று அவர்கள் வழங்கிய சால்வைகள் மற்றும் கிரீடங்களை பெற்றுக் கொண்டு வாகனத்தில் இருந்தவாறு கையசைத்ததோடு மீண்டும் தேர்தல் பரப்புரைக்கு நேரத்துடன் வந்து உங்கள் மத்தியில் பேசுகிறேன் என கூறிச் நிர்வாகிகளிடம் கூறிச் சென்றார்.
தேர்தல் பிரச்சாரம் நேரம் முடிவடைந்தும் இரவு 10 மணிக்கு மேல் ஒரு மணி நேரமாக 11 மணிவரை டிடிவி.தினகரனின் பேச்சைக் கேட்காவிட்டாலும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் காத்திருந்தது டிடிவி தினகரனை நெகிழ வைத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.