தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள பனையூரில் அலுவலகம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை அந்த வளாகத்தில் ஒருவர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள பெரிய பங்களாவில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வரும்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான பிரபாகரன், என்ற பெயின்டர் ஒரு மாதமாக பங்களாவில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு குடிபோதையில் பரோட்டா வாங்க சூப்பர்வைசரிடம் நூறு ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், மறுநாள் காலை 8 மணியளவில் பிரபாகரன் கையில் சிறிது பரோட்டா மற்றும் வாயிலும் பரோட்டா இருந்தபடி உயிரிழந்து கிடந்துள்ளார், இதனை பார்த்த அலுவலக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்ற பொலிசார், மதுபோதையில் அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதில் மூச்சு குழாயில் பரோட்டோ அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.