Categories: தமிழகம்

ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர் : குவியும் பாராட்டு…

புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த பணத்தை போலீசார் உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் காமராஜர் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி சாந்தி (45). இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது செலவிற்காக, தனியார் மருத்துவமனை வாசலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர், ரூபாய் 10 ஆயிரம் எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போன்னிற்கு பணம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கியில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிதம்பரத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் பணம் வெளியில் இருப்பதை கண்டு அதனை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் சாந்தி உடையது என வங்கி ஊழியர்கள் உறுதி செய்ததை அடுத்து வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், அந்த பணத்தை சாந்தியிடம் ஒப்படைத்தார்.
மேலும் பணத்தை ஏடிஎம் மையத்திலிருந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரகுமாரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

KavinKumar

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

7 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

52 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

This website uses cookies.