Categories: தமிழகம்

ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர் : குவியும் பாராட்டு…

புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த பணத்தை போலீசார் உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் காமராஜர் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி சாந்தி (45). இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது செலவிற்காக, தனியார் மருத்துவமனை வாசலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர், ரூபாய் 10 ஆயிரம் எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போன்னிற்கு பணம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கியில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிதம்பரத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் பணம் வெளியில் இருப்பதை கண்டு அதனை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் சாந்தி உடையது என வங்கி ஊழியர்கள் உறுதி செய்ததை அடுத்து வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், அந்த பணத்தை சாந்தியிடம் ஒப்படைத்தார்.
மேலும் பணத்தை ஏடிஎம் மையத்திலிருந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரகுமாரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

KavinKumar

Recent Posts

வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!

விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…

19 minutes ago

முடி காணிக்கை செலுத்திய துணை முதலமைச்சரின் மனைவி.. மகனுக்காக மொட்டை போட்டு வழிபாடு!

ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…

49 minutes ago

STR 49 பட இசையமைப்பாளரை அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிம்பு…

வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

1 hour ago

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; உறுதியேற்ற தவெக தலைவர் விஜய்…

தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…

2 hours ago

பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…

2 hours ago

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

This website uses cookies.