Categories: தமிழகம்

செல்போன் கவரை குறைவான விலைக்கு விற்றவருக்கு கொலை மிரட்டல் : அடித்து துன்புறுத்திய அதிர்ச்சி வீடியோ வைரல்!!

பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்பவரை பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர் தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் விற்பனையை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.

தற்பொழுது பழனியில் ஐ எஃப் எஸ் சீசன் தொடங்கியுள்ளதால் பழனி நகர் காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் செல்போன் கவர்களை வைத்து வியாபாரம் செய்து வரும் ராஜனை பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்ற நபர் தாக்கியுள்ளார்.

மேலும் 50 ரூபாய்க்கு செல்போன் கவரை நீ விற்பனை செய்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என கேட்டு மிரட்டி கன்னத்தில் அடிக்கிறார்.

தொடர்ந்து பழனியில் இனி வியாபாரம் செய்தால் நீ இருக்கமாட்டாய் என கொலை மிரட்டல் விடுக்கிறார். இதை செல்போனில் பதிவுசெய்து செல்போன் கடைக்காரர்கள் மட்டும் உள்ள வாட்சப் குழுவில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

இதுகுறித்து சாலையோர வியாபாரி ராஜனிடம் கேட்ட பொழுது :- மதுரையில் மனைவி மட்டும் இரண்டு பெண் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்வதாகவும், வேலை கேட்டுச் சென்றால் யாரும் வேலை கொடுக்காத நிலையில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், ஆனால் செல்போன் கவர்களை விற்பனை செய்யக்கூடாது எனக்கூறி ஒருவர் தன்னை மிரட்டியதாகவும் அடித்ததாகவும், தன்னை யாரும் காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

வேறு வழியின்றி வாங்கிய செல்போன் கவர்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அதே இடத்தில் கடை போட்டு விற்பனை செய்து வருவதாகவும் ஆனாலும் மேலும் பல கடைக்காரர்கள் வந்து தன்னை விரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பழனி முருகனை நம்பி வெளியூர் உள்ளூர் என வித்தியாசமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பெரும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கை வியாபாரிகள் மற்றும் வடநாட்டு வியாபாரிகள் என அனைவரும் பிழைக்கும் போது, குடும்ப வறுமை காரணமாக சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் ஏழை வியாபாரியை கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் கடைக்காரர்கள் பிடித்து அடிப்பதும் மிரட்டுவதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உழைத்து பிழைக்க நபரை உழைக்கக் கூடாது எனக்கூறி அடிப்பதும், அதற்கு சில கடைக்காரர்கள் ஆதரவாக இருந்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நயன்தாராவை புகழ்ந்து பேசிய தனுஷ்.. ச்சே எவ்ளோ நல்ல மனசு!

நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…

11 minutes ago

தாய்மொழியைத்தான் பாஜக திணிக்கிறது.. அண்ணா பெயர் குறைந்தது.. அண்ணாமலை பேச்சு!

தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

20 minutes ago

‘டிராகன்’ பட நடிகை போனில் அந்த மாதிரி மீம்..ஷாக் ஆன பிரதீப் ..நெட்டிசன்கள் விமர்சனம்.!

கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…

22 minutes ago

விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!

ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…

1 hour ago

கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம்… எதிர்பார்ப்பை எகிற வைத்த B4U!

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…

1 hour ago

உள்ளூரிலேயே விலை போகாதவர் PK… திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…

2 hours ago

This website uses cookies.