திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் உள்ளது.
நேற்று நியூ இயர் என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. கடை முன்பு அவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை வெளியில் வந்து பார்த்த பொழுது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது நேற்று மதியம் 2:30 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சிறிது நேரம் அங்கு நின்று யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டவர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றார்.
இது குறித்து விஜயன் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.