வேலூர் : வேலூர் அருகே சாலையின் குறுக்கே வந்த நபர் மீது அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வேலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கேஜிஎப் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து எர்த்தாங்கல் என்னும் பகுதியில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே திடீரென பவன்குமார் என்பவர் வந்ததால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையின் ஓரம் பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள வயல்வெளியில் பேருந்து இறங்கியது. இதில் சாலையின் குறுக்கே வந்த பவன்குமார் காயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்தை போக்குவரத்து துறையினர் மீட்டனர். மேலும் விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.