பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி. மறியலால் பதற்றம்!!
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு நாளை நடைபெறுகிறது.
இதனையொட்டி புளியம்பட்டியில் பிளக்ஸ் வைப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் இன்று இந்து முன்னணி அமைப்பினர் பிளக்ஸ் வைத்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் பேனர் வைக்க அனுமதி இல்லை என கூறி தடுத்துள்ளனர். அதற்கு இந்து முன்னணியினர் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முறையாக அனுமதி பெற்றுள்ளோம். இதுகுறித்து எஸ்.பி. சிஜடியிடம் கேட்டு பாருங்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த போலீசார் அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி அமைப்பினர் ஒருவரை போலீசார் தாக்கியதால் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.