Categories: தமிழகம்

மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!!

மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!!

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். கொல்லங்கோடு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.

இந்த நிலையில் கொல்லங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்ணெண்ணைய்களை அதிக விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்லும் கடத்தல் கும்பல்களை தெரிந்துகொண்டு அவர்களிடம் போய் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததோடு மாமூல் கொடுக்கமால் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பிடித்தும் மிரட்டி வந்ததோடு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த மீனவ மக்கள் பங்கு தந்தையர்கள் உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் கணேஷ்குமாரின் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதிரடிபடைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் விரக்தியடைந்த கணேஷ்குமார் நேற்று முதல் வீட்டிற்கு செல்லாமல் மதுபோதையில் காவலர் தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது அறையை காவலர்கள் திறந்து பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்தபடி கிடந்துள்ளார் இதனையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவரது உறவினர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்த காவலர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

27 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

55 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

2 hours ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.