Categories: தமிழகம்

திருடி திருடி ₹4.5 கோடி மதிப்பில் நூற்பாலை வாங்கிய கொள்ளையன்.. கோவையை கலங்கடித்த ”ராடுமேன் மூர்த்தி”!!

கொள்ளையடித்த பணம், பொருட்களை வைத்து கொள்ளையன் ₹4.5 கோடி மதிப்பில் நூற்பாலை வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி வடக்கு காவல் துணை ஆணையாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின், தலைமையில் காவல் ஆய்வாளர் வினோத்குமார், சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பார்வதி, சிறப்பு சார்பு ஆய்வாளர் அன்பழகன், தலைமைக் காவலர்கள் கதிர்வேல், பார்த்திபன், பாலபிரகாஷ், பிரகாஷ், ரவி, குருசாமி. ஆனந்தன் அடங்கிய தனிப்படையினரின் 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி கோவை, திருப்பூர். திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று அறிவியல் தடையங்களைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருட்டு வழக்குகளில் மூளையாக செயல்பட்ட மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூர்த்தி என்பவர் ராட்மேன் (Rodman) என தெரியவந்தது. இவர் தனியாக திருட செல்லும் போது முகத்தை முழூவதுமாக மறைத்துக் கொண்டும், முழுக்கை சட்டை அணிந்தும் ரயில்வே டிராக் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பூட்டி இருக்கும் வீட்டினை நோட்டமிட்டு இரும்பு கம்பியை பயன்படுத்தி பூட்டினை உடைத்து உள்ளே கொள்ளை அடிப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கோவை மாநகரில் 14 திருட்டு வழக்குகளிலும், 4 வழிபறி, கூட்டுக் கொள்ளை வழக்குகளிலும் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

இவரும் இவரது தலைமையிலான கும்பலும் தனித் தனியாகவும். கூட்டாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 50 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் இவர் தனியாக இவர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் உட்பட 4 நபர்களிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதும் தெரியவந்து உள்ளது.

மேலும் அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தங்கம், ரொக்கம், கார்கள். விலை உயர்ந்த பைக்குகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் கொள்ளை அடித்து சேகரித்து உள்ள பணத்தை பயன்படுத்தி ராஜபாளையத்தில் சுமார் 4.5 கோடி மதிப்பீலான ஸ்பின்னிங் மில் வாங்கி உள்ளதும் விசாரணையில் தெரிய வருகிறது.

இவ்வழக்கில், மனோஜ்குமார், சுதாகர். ராம்பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை தனிப்படையினரால் தேடப்பட்டு வருகிறது.

கொள்ளையடித்த பணம், பொருட்களை வைத்து ₹4.5 கோடி மதிப்பில் திருடன் நூற்பாலை வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

11 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

12 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

13 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

13 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

13 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

14 hours ago

This website uses cookies.