Categories: தமிழகம்

வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. அலறிய மாணவர்கள் : 3 பேர் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 413 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பதினோராம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய மூவரும் பள்ளி துவங்கும் முன்பபே தங்களுடைய வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியில் மேற்கூரை பூச்சி கட்டிடம் இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் மூன்று மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த மூன்று மாணவர்களையும் தலைமை ஆசிரியர் காளியப்பன் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிரிச்சுக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மூவரையும் மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் பள்ளியின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு

இந்த கட்டிடம் 2021-22 ஆண்டில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் நிதி ஒதுக்கீட்டில் ரூ 21.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று மாணவர்கள் மீது பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

1 hour ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.