ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யாண்டகண்டியில் துளசி என்ற ஜெகனன்னா காலனியில் அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டி வருகிறார்.
ராஜமுந்திரி சத்ரிய பரிஷத் அமைப்பாளர்கள் துளசி கட்டும் வீட்டிற்கு பொருட்களை சப்ளை செய்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே வீட்டிற்கு உண்டான டைல்ஸ் வந்த நிலையில் நேற்று மாலை துளசி வீட்டிற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் வீட்டிற்கு உண்டான மின்சார உபகரணங்கள் பார்சல் வந்துள்ளதாக துளசிக்கு போன் செய்து கூறினார்.
இதையும் படியுங்க: முருகனுக்கு காணிக்கையாக வந்த ஐபோன்… அரோகரா கோஷத்துக்கு பதில் கோவிந்தா போட்ட பக்தர்!
உடனடியாக துளசி மின்சார உபகரணங்கள் இருந்ததாக பார்சலை கொண்டு வந்த நபர் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று காலை துளசி பார்சலை திறந்த பார்த்தபோது அழுகிய பிணத்தை பார்த்த துளசிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரையும் அழைத்துக் காண்பித்தார்.
உடனடியாக போலீசாருக்கு அழுகிய சடலம் அடங்கிய பார்சல் குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக எஸ்.பி. நயீம் ஆஸ்மி தலைமையிலான போலீசார் அங்கு வந்து என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் பார்சல் கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் உடல் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் சடலம் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.