Categories: தமிழகம்

அடியாத மாடு படியாது என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்த சுவாரஸ்ய சம்பவம் : மாஸ்டர் பட விஜய் பாணியில் களத்தில் இறங்கிய பள்ளி தலைமையாசிரியர்!!

விழுப்புரம் : பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுரை சொல்லியும் கேட்காத மாணவர்களை நல்வழிப்படுத்த அதிரடியாக கத்திரிக்கோல் தேங்காய் எண்ணையுடன் தானே களத்தில் இறங்கிய அரசு பள்ளி தலைமையாசிரியர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளியில் சுமார் 1126-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தனர்.

இதனால் அந்த பள்ளியின் மாணவர்கள் நலன் சீர் கெட்டுப் போயிருந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்றதிலிருந்து மாணவர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல ஒரு போராட்டமே நடத்தி இருக்கிறார். இதற்காக 10 தடவைக்கு மேல் பெற்றோர்களை சந்தித்து சந்திப்பு கூட்டமும் நடத்தியிருக்கிறார்.

ஆனால் எந்தவித பயனும் ஏற்படாத நிலையில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு மற்றும் காவல் துறையின் உதவியோடு தானே களமிறங்கி மாணவர்களிடையே சீர்திருத்தங்களை கொண்டுவர தலைமையாசிரியர் சந்திரகுமார் பள்ளிக்கு வரும் மாணவர்கள் நகங்களை ஒழுங்காக வெட்டிருக்கிறார்களா? சீருடைகள் சுத்தமாக அணிந்து கொண்டு வருவார்களா? மேலும் முடி வெட்டிக் கொண்டு வருகிறார்களா? என்று கவனத்துடன் பார்த்து முடி வெட்டாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கத்தரிக்கோல் சீப்புடன் முடிகளை வெட்டி அவர்களுக்கு தேங்காய் எண்ணை தடவி வகுப்புக்கு உள்ளே அனுமதிக்கிறார்.

இது வாரா வாரம் அவரவரின் முக்கிய பணியாக இருந்து வருகிறது. மேலும் மாணவர்களில் சூழ்நிலை கருதி போலீசார் பாதுகாப்புடன் இந்த செயலை தலைமையாசிரியர் செய்து வருகிறார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மனம் நெகிழ பேட்டியளித்த அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்வேறு போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்த அரசு பள்ளி மாணவர்கள் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நல்ல வழிக்குத் திரும்பி இருக்கிறார்கள்.

இந்த பள்ளியில் உள்ள 1126 மாணவர்களில் சுமார் 99 சதவீத மாணவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர்களை நல்வழிப்படுத்துவது இறைவன் தமக்கு அளித்த ஒரு வரம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

10 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

11 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

12 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

12 hours ago

This website uses cookies.