Categories: தமிழகம்

திருச்செந்தூரில் 100மீ தூரம் உள்வாங்கிய கடல்…2வது நாளாக வெளியே தெரியும் பாறைகள்: பயமின்றி செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள் தெரிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதால், மண் திட்டுகள் மற்றும் பாறைகள் வெளியே தென்படுகிறது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது வழக்கம். இந்த நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு முதல் 1ம் தேதி மதியம் வரை அமாவாசை இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு மற்றும் அய்யா வைகுண்டர் கோவில் பகுதிகளில் சுமார் 100 அடி தூரத்தில் கடல்நீர் உள்வாங்கியது.

அமாவாசை தினத்தை முன்னிட்டு 2 நாட்களுக்குப் பிறகு, கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. கடந்த அமாவாசை தினத்தன்று, கடல் உள்வாங்கிய நிலையில் தொடர்ந்து இன்று 4வது நாளாக கடல்நீர் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் வெளியில் தெரியும் பாறைகள் மீது நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு, கடல் உள்வாங்கும் நிகழ்வு தெரியும் என்பதாலும், கோயில் வளாகத்தை ஒட்டிய கடல் பகுதியில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை என்பதாலும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

35 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

56 minutes ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

60 minutes ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

3 hours ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

3 hours ago

This website uses cookies.