தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் உலகம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது.
கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி வேலைகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள கொடி மரங்களுக்கு புதிய மரங்கள் நடப்பட உள்ளது.
இந்த கொடி மரங்களை சுவாமி சன்னதி கொடிமரம் தொழிலதிபர்கள் அழகராஜா ,,அம்மன் சன்னதிக்கு வெங்கடேஷ் ராஜா ஆகியோர் சொந்த செலவில் வழங்கியுள்ளனர்.
இருவரும் அதற்கான மரங்களை தேர்வு செய்ய ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து சுமார் 2500 மரங்களில் இருந்து நேர்த்தியான இரண்டு வேங்கை மரங்களை தேர்வு செய்து தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக கப்பலில் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த மரங்கள் லாரிகள் மூலமாக தென்காசி கொண்டுவரப்பட்டு கொடி மரத்திற்கான பிரத்தியேக சைஸில் ஆலையில் அறுக்கப்பட்டு இன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
சுவாமி சன்னதிக்கு 45 அடி நீள கொடி மரமும் அம்மன் சன்னதிக்கு 38 அடி நீள கொடிமரமும் கொண்டுவரப்பட்டது. இந்த கொடி மரங்கள் கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் தொழிலதிபர்கள் அழகர்ராஜா வெங்கடேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட கோவில் கொடி மரங்களை ஆலயத்திற்கு வருகை தந்த பல்வேறு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.