விழுப்புரம் நகரபகுதிகளில் வீட்டில் பதுக்கி தடைசெய்யப்பட்ட பான்மசாலாவை வினியோகித்த நபரை போலீசார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் 94 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் நகர பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பான்மசாலா வினியோகிக்கப்படுவதாக டி.எஸ்.பி பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் மணி நகரை சார்ந்த ஹபிப் ரஹ்மான் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்ததில் பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து வீட்டில் 14 மூட்டைகளில் 150 கிலோ எடையில் 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து ஹபிப் ரஹ்மானை கைது செய்தனர். பான் மசலாவை பதுக்கிய நபரிடமிருந்து 94 ஆயிரம் ரொக்க பணத்தையும் பான்மசாலா கடத்தலில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பான்மசாலா பெங்களூரு பகுதியிலிருந்து காய்கறி வண்டிகள் வாடகை வண்டிகளில் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் பகுதி வழியாக கடத்தப்பட்டு வருவதால் அதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் பான்மசாலா கடத்திய 15 நபர்களின் வங்கி கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாக எஸ் பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.