Categories: தமிழகம்

காதலி வீட்டுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சடலமாக மீட்ட சோகம்!!

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (வயது 20).

பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் தந்தைக்கு துணையாக கோரைப்பாய் பின்னும் வேலை செய்து வந்தார். சங்கவி முசிறி அடுத்து மணல்மேடு பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு காதலியை பார்ப்பதற்காக ஆமுர் சங்கவி வீட்டின் பகுதிக்கு இரவு வந்தபோது அப்பகுதி மக்கள் திருடன் என நினைத்து அடித்துள்ளனர். இதனைக் கண்ட சங்கவி நான் அவரை காதலிக்கிறேன் என்னை பார்ப்பதற்காக தான் வந்தார் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவனை அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்து சங்கவி பெற்றோர்கள், பொதுமக்களும் திட்டி உள்ளனர். காதலனுக்கும் காதலுக்கும் ஏற்பட்ட அவமானத்தால் மனம் உடைந்த சங்கவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை சங்கவி ரூமில் இருந்து வெளியே வராததால் சங்கவியின் பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்தபோது தூக்கில் தொங்கி நிலையில் இருந்துள்ளார்.

இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

சங்கவின் பெற்றோர் சங்கவிக்கு தீராத வயிற்று வலியால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

6 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.