Categories: தமிழகம்

தங்கையின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் சிசிடிவி காட்சி!

தங்கையின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுக்க சென்ற அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : வைரலாகும் சிசிடிவி காட்சி!

திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலை குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் சௌந்தரபாண்டி (22). இவரது தங்கை சௌந்தர்யா. சௌந்தர்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் எனது தங்கைக்கு சாக்லேட் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கடைக்கு கிளம்பியுள்ளார்.

அப்பொழுது, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த TN12-Z- 9968 என்ற நம்பர் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்து சௌந்தரபாண்டி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரபாண்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

இதைக்கண்ட தங்கை சௌந்தர்யா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு திருச்செந்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை மடைக்கு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காரில் இருந்து இறங்கிய போதை ஆசாமிகள் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதற்குள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முனியசாமி (29) என்பவரை விசாரணைக்காக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படுகாயமடைந்த சுதந்திரபாண்டி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விபத்துக் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னர், விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்த காரில் வந்த போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக பேசியதாக அப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்பகுதியில் ஏற்கனவே தொடர்ந்து விபத்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டு, வேகத்தடை மற்றும் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இருப்பதால், இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்து மீண்டும் விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கை பிறந்தநாளுக்கு தங்கைக்காக சாக்லேட் வாங்க போன அண்ணன், தங்கை கண்முன்னே கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

2 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

2 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

4 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

4 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

4 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

5 hours ago

This website uses cookies.