சூலூர் அருகே நிலக்கரி லோடு ஏற்றி வந்த லாரி பள்ளி பேருந்து மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பியதால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி பதப்பதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் செந்தில் முருகன், திருநெல்வேலியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு நிலக்கரி லோடு ஏற்றி வந்துள்ளார்.
கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது கிட்டம்பாளையம் நால்ரோடு அருகே லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது வாகரயாம் பாளையத்திலிருந்து கருமத்தம்பட்டி நோக்கி எதிர்ப்புறமாக வந்த தனியார் பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பினார்.
வலது புறம் இருந்த பேரிகார்டரில் மோதிய லாரி, அங்கிருந்த பேருந்து நிழற்குடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எதிர்ப்புறம் வந்த தனியார் பள்ளி பேருந்து விபத்திலிருந்து தப்பியது.
லாரி ஓட்டுனரின் சமயோசிதத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் உயிரிழந்த நிலையில் சாலையின் இருபுறமும் பேரிகார்டர்கள் அமைக்கப்பட்டபோதும் இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.