தருமபுரி : தருமபுரி அருகே அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் வாலை பிடித்த துன்புறுத்திய சம்பவம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அடுத்த முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இந்த ஆண்டு முதல் தகடூர் வடமாடு மற்றும் ஜல்லிகட்டு பேரவை சார்பில் மஞ்சுவிரட்டு திருவிழா இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் பங்கு பெரும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை துன்புறுத்தக் கூடாது என்ற அரசாணை உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் அரசாணைக்கு எதிராக கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற போட்டியில் மாட்டின் வாலை சுமார் அரை மணி நேரம் பிடித்து இழுத்து துன்புறுத்தி விளையாடினர்.
விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி வழங்கி வரும் நிலையில், அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மாடுகளை துன்புறுத்தி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காளைகளை துன்புறுத்தி போட்டி நடத்துபவர்கள் மற்றும் மாட்டின் வாலை பிடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அதுவும் கால் நடை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் வாலை பிடித்த துன்புறுத்திய சம்பவம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.