GEOMETRY BOX கேட்ட மகன்.. பள்ளிக்கு அழைத்து செல்லும் போது விபரீதம்.. மகன் கண் முன்னே நடந்த கோரம்!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2024, 2:44 pm
![acc](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/06/acc-1-1024x560.jpg)
தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று சோலைக் கொட்டாயில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகனை விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/06/image-129.png)
அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடையில் நின்றுள்ளார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/06/image-130.png)
அப்பொழுது பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்துக்கொண்டு இருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதலை தவிர்க்க தனியார் பேருந்து ஓட்டுனர் இடது புறம் பேருந்தை திருப்பியுள்ளார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/06/image-128.png)
அப்பொழுது சாலையை கடக்க நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.. இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை : பாயும் கண்டனங்கள்!
உடனடியாக மதிகோன்பாளையம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் பேருந்து ஓட்டுனரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0