தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று சோலைக் கொட்டாயில் உள்ள பள்ளியில் தன்னுடைய மகனை விட்டு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்க தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடையில் நின்றுள்ளார்.
அப்பொழுது பாப்பிரெட்டிபட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்துக்கொண்டு இருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதலை தவிர்க்க தனியார் பேருந்து ஓட்டுனர் இடது புறம் பேருந்தை திருப்பியுள்ளார்.
அப்பொழுது சாலையை கடக்க நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.. இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை : பாயும் கண்டனங்கள்!
உடனடியாக மதிகோன்பாளையம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் பேருந்து ஓட்டுனரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.