கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சதீஷ், அனீஷ் என்ற இரு மகன்கள் உண்டு.
மூத்த மகன் சதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டாவது மகன் அனீஷ்க்கு திருமணம் செய்து வைத்ததோடு தங்கள் பெயரில் இருந்த வீடு மற்றும் நிலத்தையும் அவர் பெயரில் செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்துள்ளனர்
இந்த நிலையில் கூலி வேலை பார்த்து வந்த நீலகண்ட பிள்ளை முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிய நிலையில் மனைவி தங்கமும் புற்று நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்
இவர்களை மகன் அனீஷ் மற்றும் மருமகள் பிரதீபா சரிவர கவனிக்காமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்த அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் எங்களுக்கு சொந்தமான வீட்டையும் நிலத்தையும் மகனுக்கு செட்டில்மென்ட் ஆவணமாக எழுதி கொடுத்துள்ளோம். இப்போது எனது மகன் தனது மனைவியுடன் சேர்ந்து எங்களை அடித்து வீட்டை விட்டு வெளியேறுமாறு துன்புறுத்தி வருகிறான்.
தற்போது நாங்கள் உறவினர்கள் வீட்டில் இருப்பதாகவும் தனது மகனிடம் இருந்து பராமரிப்பு கிடைக்க பெறாத காரணித்தினாலும் புற்றுநோய் செலவினங்களுக்காகவும் எனது மகனுக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யும் படி மனு கொடுத்தனர்.
இதனையடுத்து அவர்களது மகன் மற்றும் மகளிடம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்திய சார் ஆட்சியர் கௌசிக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று தங்கம் தனது வீடு மற்றும் நிலத்தை மகன் அனீஷ் பெயருக்கு எழுதி கொடுத்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உத்தரவு நகலை வழங்கியதோடு அவர்களுக்கு மகன் அனீஷ் இடையூறு ஏற்படுத்தினால் காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.