பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றத்தால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இதனை அடுத்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட பல்லடம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ராஜா என்ற நபர் என்பது தெரிய வந்தது.
ராஜா தான் கொலையாளியா என சந்தேகித்த போலீசார் தலைமறைவாகி உள்ள ராஜாவைத் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.