பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!
திண்டுக்கல் தாடிக்கொம்பு கள்ளிப்பட்டி ஆதிசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த டூ வீலர் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்துவபர் சீனிவாசன் 40. இவரது மனைவி மேனகா 36. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஹிந்து பாகினி16, தான்ய ஸ்ரீ 12, என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மேனகாவும், அவரது உறவினர் ஒருவரும் தகாத உறவில் இருந்தனர்.
இதை தெரிந்து கொண்ட சீனிவாசன், அடிக்கடி மேனகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களுக்கு முன் சீனிவாசனுக்கும் மேனகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர். தொடர்ந்து அடிக்கடி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மேனகா, இன்று மேனகா,தன் வீட்டில் மகள்களான ஹிந்துபாகினி, தான்யஸ்ரீ மூவரும் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.
மேலும் படிக்க: ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம மக்கள்.. விசாரணையில் சிக்கிய சிப்ஸ் தொழிற்சாலை.!!
தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் சீனிவாசனை,போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று மூவரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.