திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேடப்பாளையம் பிரிவில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
இந்தநிலையில் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி பார்த்த போது கை கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு மற்றும் பல்லடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிணற்றில் மிதந்த வாலிபர் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்(34) என்பது தெரியவந்தது.
மேலும் சுரேஷ் குமாரின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் வேறு யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கை கால் கட்டப்பட்டு இறந்த நிலையில் வாலிபர் சடலமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.